Monday, December 20, 2010

Vizhi Moodi - Ayan Tamil Lyrics

Vizhi Moodi - Ayan Tamil Lyrics

ஆண்: விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக்காலம் என் வாழ்வில் வருமோ
மழைக்கிளியே மழைக்கிளியே
உன் கண்ணைக் கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே... (விழி மூடி...)

(இசை...)

ஆண்: கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே (விழி மூடி...)

(இசை...)

ஆண்: ஆசை என்னும் தூண்டில் முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்ட பின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டுத் தனியாய் சுற்றிப் பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாய வலையல்லவா.. புது மோன நிலையல்லவா..
உடை மாறும்.. நடை மாறும்..
ஒரு பாரம் எனை பிடிக்கும்.. (விழி மூடி...)

No comments:

Post a Comment