கவிதை :
என் அப்பாவின் நியாபகங்கள் என் மனத்திரையில்…
இன்று அவர் உடலால் மறைந்து விட்டார்.
ஆனால் இன்னும்
என் அப்பாவின் வாசனை மறுபடியும் என்னால் உணரமுடிகிறது.
அப்பா என்னுடனே இருக்கிறார்.
“I LOVE U APPA”..! “Miss U” …
ரொம்ப நாளைக்கு அப்புறம் மனம் லேசாகும் அளவுக்கு அழுதேன். மறுபடியும் வாழ்கை சக்கரத்தில் ஓட தயாராக வேண்டும். அப்பாவின் கனவை நிறைவேற்ற.................
மரணப் படுக்கையில் கூட
என் வருகை தேடி
பாரம் இழுத்த மூச்சல்லவா !
அவருடைய கட்டிலின் ஓரங்களில்
இன்னும் மிச்சமிருக்கும் கைரேகையை
விரல்கள் அனிச்சைச் செயலாய்
அரவணைத்துக் கசிகின்றன.
எம்மிடம் விட்டுச் சென்ற என் அப்பாவின் நினைவுகளுடன் சிறகடிக்கிறேன்…................
$$$சிவா $$$$............
No comments:
Post a Comment