Wednesday, December 15, 2010

Oru Malai Neram - Naan Mahaan Alla Tamil Lyrics

Oru Malai Neram - Naan Mahaan Alla Tamil Lyrics

ஆண்: ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
 என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு

பெண்: வழிதோறும் பூக்கள் வாழ்த்து சொன்னது கைதொட்டு
 இது கடவுள் எழுதி காதில் பாடும் தாலாட்டு

ஆண்: இதழோரம் இதழோரம் புதிதாக புன்னகை ஒன்று
 எப்போதும் பார்த்தேனே சில நாளாய் நானே
 கதவோரம் தலை நீட்டி தினம் பார்க்கும்
 சிறு பிள்ளை போலே என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க...

ஆண்: ஓ... ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
 என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு

 (இசை...)

பெண்: தினம் உனை பார்க்கும்போது இடையினில் தோன்றும் அந்த
 ஊடலாம் அன்பே ஐய்யோ அழகானது

ஆண்: தனிமையில் நீயும் நானும் கண்களாலே பேசும்போது
 எனக்குள்ளே தோன்றும் மோகம் புதிதானது

பெண்: அச்சமா, நானமா, அன்பிலே கொல்வதா
 உன்னிடம் இழுத்தது எதுவோ தெரியலேயே

ஆண்: ஹேய்... எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
 எப்போது காதல் தாக்கும், தெரியாதது
 எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
 எப்போது காதல் தாக்கும், தெரியாதது

 (இசை...)

ஆண்: மழை வரும் நேரம் முன்பு, தரை வரும் காற்றைப் போல  மனம் எங்கும் வந்தாய் பெண்ணே, ஜில்லென்று நீ

பெண்: தூவும் மழை நின்ற பின்பு, தூரல் தரும் மரங்கள் போல
 நினைவுகள் தந்தே செல்வாய், என்றென்றும் நீ

ஆண்: ஓ... கண்களா, கன்னமா, பார்வையா, வார்த்தையா
 உன்னிடம் பிடித்தது எதுவோ, தெரியலேயே...

பெண்: எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
 எப்போது காதல் தாக்கும், தெரியாதது
 எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
 எப்போது காதல் தாக்கும், தெரியாதது

ஆண்: ஒரு மாலை நேரம் வந்தது, வந்தது பூங்காற்று
 என் மனதின் ஓரம் சென்றது, சென்றது பூ போட்டு

No comments:

Post a Comment