Monday, December 20, 2010

Chinnansirusuka Manasukkul - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics

Chinnansirusuka Manasukkul - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics

ஆண்: தானனா தந்தானனா நன தன்னானனா ஒ ஒ ஒ...

பெண்: தானனா தந்தானனா நன தன்னானனா ஒ ஒ ஒ...

ஆண்: சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
 சின்னத்தூரல் போட

பெண்: புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
 பட்டுப்பூக்கள் பூக்க

ஆண்: பொதுவாக பருவம் ஒரு பூந்தோட்டமாச்சு

பெண்: மெதுவாக பழக்கம் ஒரே நீரோட்டமாச்சு

ஆண்: விலகாத உறவு ஒரு கொண்டாட்டமாச்சு (புத்தம் புதுசாக...)

 (இசை...)

பெண்: சிடுமூஞ்சி நீதான் என்று சொல்லிச்சொல்லி
 கிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன சேட்டை செய்தேனா...

ஆண்: சந்து பொந்தில் நீதான் வந்தா ஒத்திப்போக ஒத்துக்காம
 சண்டியர் போல் வம்பு செய்தேனா...

பெண்: அரை டிராயர் போட்ட பையன் நீ
 பாடாத லாவனி

ஆண்: விரல் சூப்பி நின்ன புள்ள நீ
 போட்டாச்சு தாவணி
 விளையாட்டா இருந்த முகம் ஏன் வெளிறிப்போச்சு

பெண்: வேறென்ன பூப்பு அடைந்த
 விவரம் தெரிஞ்சாச்சு

ஆண்: குறும்பாட்டா திரிஞ்ச பொண்ணு
 ஏன் குமரியாச்சு

பெண்: வேறென்ன உடம்பு உனக்கு
 வழங்க முடிவாச்சு

 (இசை...)

ஆண்: மண்ணாலதான் வீடு கட்டி
 நானும் நீயும் வாழுறப்போ
 மீன் கொழம்பு ஆக்கிப் போட்ட நீ

பெண்: கமரக்கட்டு கடலை முட்டாய்
 வாங்கினாக்க வாயில் வச்சு
 காக்காக் கடி கடிச்சு திண்பாய் நீ

ஆண்: கருவாட்டைப் போல தீயில
 என் நெஞ்சை வாட்டுன

பெண்: அலங்கார அம்மன் கோவிலில்
 கண்ஜாடை காட்டின
 அடி ஆத்தி மனசுக்குள்ள பூ வச்சதாரு

ஆண்: வேறாரு ஆடி அசையும் அழகுமணித் தேரு
 அடி ஆத்தி நெனப்புக்குள்ள போய் நின்னதாரு

பெண்: வேறாரு கூச்சம் நிறுத்த
 ஈச்சம் மரப்பாய் வா

ஆண்: சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
 சின்னத்தூரல் போட

பெண்: புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
 பட்டுப்பூக்கள் பூக்க

No comments:

Post a Comment