Friday, December 24, 2010

கவிதை : அம்மா

வணக்கம் !

“உலக அதிசயங்கள்” பட்டியல் சர்வதேச அமைப்புகள் மூலமாக ஆண்டுக்கு ஆண்டு மாறலாம் . ஆனால் மாறாத உலக உன்னதம் யாதெனச் சொல்லிக் கேட்டால் , அது தாயைத் தவிர யாராய் இருக்க முடியும்?. பாசத்தை வேறு வழியற்ற தவணை முறையில் செலுத்தி , அதற்கும் பல எதிர்பார்ப்பு வட்டிகளை எண்ணிப் பழகும் எண்ணற்ற உறவுகள் மத்தியில் நம்மையே உயிராய் நினைக்கும் ஒரே உறவு அம்மா.
போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்
இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.
நிதர்சன பிம்ப நிழல் உடையாமல் விழுகிறது வாசிக்கும் நெஞ்சம் அருகில் !!!!!
நட்புடன்
சிவா........................................

No comments:

Post a Comment