Naan Dharmanda - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics
ஆண்: நான் தருமன்டா.. பேட்ட மவராசா..
கேட்டா தரமாட்டான்
கோட்ட தொடமாட்டான்
ஆடிப்பாட சலச்சவனில்ல
அட அதுக்கும் எடமுமில்ல
பாட்டுபாடி களைச்சவனில்ல
இவன் கானக்கவிஞன் இல்ல
இவன் புடிச்சா உடமாட்டான்
நீ அழைச்சா வர மாட்டான்
இந்த பூலோகம் செஞ்சா தவம்
எடுத்தேன் நான் இந்த அவதாரம்
ஓய் ஓய் ஓய் ஓய்
ஏ இங்கப்பாரு பின்னாலப் பரிவாரம்
ஓய் ஓய் ஓய் ஓய் (நான் தருமன்டா...)
(இசை...)
ஆண்: ஏய் கூட்டம் கும்மாளம் போட்டு
என் கூட எப்போதும் பாராட்டும்
பாட்டன் இல்லாத ஆளு
நான் ஓடுற ஓட்டம் தேரோட்டம்
இஷ்டம் போல வாழ்ந்து முடிப்போம்
கஷ்டம் வந்தாக்கா கல்லால அடிப்போம்
அதிஷ்ட தொழில தினமும் முடிப்போம்
யாரு வந்தாலும் ஆதரிப்போம்
இது தும்பிக்கிட்டு... வரும் காளையடா...
தெனம் தேடிக்கிட்டு வரும் மாலையடா
இவன் தென்பாண்டி நாட்டு சிங்கமடா.. (நான் தருமன்டா...)
(இசை...)
ஆண்: ஏய் காஞ்ச கருவாடு மணக்கும்
அட காட்சின தண்ரும் ருசி இனிக்கும்
நஞ்சை எடங்கூட மொளைக்கும்
இவன் ஓஞ்சப் பின்னாலும் உறவிருக்கும்
மாத்தி மாத்தி போட்டுக் குடிப்பான்
படிக்கத் தெரியாது காதைக் கடிப்பான்
போத்தி இழுத்து படுத்ததில்ல
பொட்டப் புள்ளைக்குப் புடிச்சதில்ல
ஒரு சங்கீதத்த இவன் தொட்டதில்ல
ஆனா பாட்டு மட்டும் எட்டுக்கட்டையில
இவன் பக்கத்தில் யாரும் எட்டவில்ல (நான் தருமன்டா...)
No comments:
Post a Comment