Friday, December 24, 2010

கவிதை : உன்… சிரிப்பினில்…

கவிதை : உன்… சிரிப்பினில்…


ஒருமுறை நீ சிரித்தபோது
இதயம் கொஞ்சம்
இடம் மாறியதோ என யோசித்தேன்.
மறு முறை
யோசிக்காமல் இதயத்தை
இடம் மாற்றிக் கொண்டேன்.


உன் விலகலை
ஓர் புன்னகையோடு தான்
ஒத்துக் கொண்டேன்.
நல்லவேளை
அகத்தின் அழுகை முகத்தில் தெரியவில்லை.


எதுவும் நிலையில்லையடி
அதை
உன் விலகலில் தான்
எனக்கு உணர்த்த வேண்டுமா ?

உன் காதலுக்குப் பரிசாய்
எதையேனும் தர நினைக்கிறேன்
எதுவும் உயர்வாய் தெரியவில்லை
உயர்வாக இருப்பதெல்லாம்
உன்னிடமே இருக்கின்றன !


துவக்கமும் முடிவும் இல்லாதது
காதல் என்கிறார்கள்.
நான் துவங்கி வைத்தேன்
நீ முடித்து வைக்கிறாய்
பழமொழி பழசாகிப் போகிறதோ ?

யாரையும் நேசிக்க யாரும்
கற்றுத் தருவதில்லை.
உன்னை நேசிக்க வேண்டாமென்று
கற்றுத் தர மட்டும்
சுற்றித் திரிகிறது சுற்றம்.

உன் உதடுகள்
நிறுத்தாமல் சொல்லும் பொய்க்காய்
தலைகுனிகின்றன உன் இமைகள்.
நிமிரும் போது
நிஜம் சொல்லி நனைகின்றன கண்கள்.


உன் சிரிப்புக்குள்
என்னதான் இருக்கிறதோ ?
அது தான் என்
பிடிவாதங்களுக்கெல்லாம்
தற்கொலை முனையாகிறது.!!!!!!!!!!!

நட்புக் கவிதைகள்

நட்புக் கவிதைகள்: சிவா vin...........



தோல்வி சுகமானது......

தோல்வி சுகமானது......

தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.
நாலுகாலால் தவழும் போதே
ஓட்டத்தில்
ஆமையாவது
அம்மாக்களுக்கு தனி சுகம்................./////////////////

யார் முதலில் எனும்
சாப்பாட்டு மேஜைகளில்
தோற்றுத் தொப்பியடிப்பது
அப்பாக்களுக்குச் சுகம்...............//////////////////////

தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.
இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை
அவள்
அறிமுகப் படுத்தும் வரை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கவிதை : அப்பா….

கவிதை :

என் அப்பாவின் நியாபகங்கள் என் மனத்திரையில்…
இன்று அவர் உடலால் மறைந்து விட்டார்.
ஆனால் இன்னும்
என் அப்பாவின் வாசனை மறுபடியும் என்னால் உணரமுடிகிறது.
அப்பா என்னுடனே இருக்கிறார்.
“I LOVE U APPA”..! “Miss U” …

ரொம்ப நாளைக்கு அப்புறம் மனம் லேசாகும் அளவுக்கு அழுதேன். மறுபடியும் வாழ்கை சக்கரத்தில் ஓட தயாராக வேண்டும். அப்பாவின் கனவை நிறைவேற்ற.................


மரணப் படுக்கையில் கூட
என் வருகை தேடி
பாரம் இழுத்த மூச்சல்லவா !

அவருடைய கட்டிலின் ஓரங்களில்
இன்னும் மிச்சமிருக்கும் கைரேகையை
விரல்கள் அனிச்சைச் செயலாய்
அரவணைத்துக் கசிகின்றன.

எம்மிடம் விட்டுச் சென்ற என் அப்பாவின் நினைவுகளுடன் சிறகடிக்கிறேன்…................
$$$சிவா $$$$............

அப்பா….

i love appa
காயங்களைக்
காலங்கள் ஆற்றிவிடும் என்பது
மெய் என்று
எல்லோரையும் போல்
நம்பிக்கொண்டிருந்தேன்.
ஆறு வருடங்கள்
என்கிறது நாள்காட்டி,
நூறு வருடங்களின்
பொதி சுமந்த பாரம் நெஞ்சில்.
வருடங்களின் கரைதல்
துயரங்களின்
கரையேறுதலை இன்னும்
கற்றுத் தரவில்லை.
இன்றும் கிராமத்து
ஓட்டு வீட்டின் முற்றங்களில்
அப்பாவின் சுவடுகளை
நினைவுக் கைகள்
தழுவத் துடிக்கின்றன.
என்
தொலைபேசி அழைப்பில்
பதறியடித்து ஓடிவந்த
பாதச் சுவடுகளல்லவா அவை !
பழுதடைந்த படிகளில்
பாதம் பதிக்கையில்
உள்ளறையிலிருந்து
பரவசத்துடன் ஓடிவருகிறது
அப்பாவின் குரல்.
எனக்குப் பசியெடுப்பதை
என்
வயிறு அறியும் முன்
அறிந்த குரலல்லவா ?
விரல் பிடித்து நடந்த
வரப்புகளில்
அப்பாவின் மூச்சுக்காற்றை
ஆழமாய் இழுத்துத்
தேடித் தேய்கிறது நுரையீரல்.
மரணப் படுக்கையில் கூட
என்
வருகை தேடி
பாரம் இழுத்த மூச்சல்லவா !
அவருடைய கட்டிலின் ஓரங்களில்
இன்னும்
மிச்சமிருக்கும் கைரேகையை
விரல்கள்
அனிச்சைச் செயலாய்
அரவணைத்துக் கசிகின்றன.
ஒரு முறையேனும்
பாதம் தொட்டு
அருகிருக்கத் தவித்து
குதிக்கும் கண்ணீரும்
புகைப்படப் பூக்களருகே
இயலாமையால் விசும்புகின்றன.
வெயில்க் கழுகுகள்
கொத்திக் கிழிக்கும்
நகரத்து வியர்வை வீதிகளிலும்
அப்பாவின் குளிர்ச்சியை
மனம்
மீண்டெடுத்துத் தவிக்கிறது.
இலைகளில்லா
என் தோட்டத்துச் செடிகளில்
கிளையுதிர் காலம்
இன்னும் நிற்கவே இல்லை.
அவரோடு வாழும் கனவுகள்
கனவுகளாகிப் போனதால்,
கனவுகளிலேனும்
அவருடன் வாழும் கனவே
இப்போதென்
கலையாத கனவாய் !

கவிதை : அம்மா

வணக்கம் !

“உலக அதிசயங்கள்” பட்டியல் சர்வதேச அமைப்புகள் மூலமாக ஆண்டுக்கு ஆண்டு மாறலாம் . ஆனால் மாறாத உலக உன்னதம் யாதெனச் சொல்லிக் கேட்டால் , அது தாயைத் தவிர யாராய் இருக்க முடியும்?. பாசத்தை வேறு வழியற்ற தவணை முறையில் செலுத்தி , அதற்கும் பல எதிர்பார்ப்பு வட்டிகளை எண்ணிப் பழகும் எண்ணற்ற உறவுகள் மத்தியில் நம்மையே உயிராய் நினைக்கும் ஒரே உறவு அம்மா.
போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்
இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.
நிதர்சன பிம்ப நிழல் உடையாமல் விழுகிறது வாசிக்கும் நெஞ்சம் அருகில் !!!!!
நட்புடன்
சிவா........................................

கவிதை : அம்மா

GOPI  in


அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.
மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.
பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .
என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.
அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?
எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?
வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?
எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?
உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?
இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.
எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.
போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்
இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.

CHRISTIYANO SIVALDO................... inetcafe

Thursday, December 23, 2010

நட்புக் கவிதைகள்

நட்புக் கவிதைகள்

man-thinking
“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?


அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.


பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்


அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.


நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.


கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.


“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.


யாரை ரொம்பப் பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன்
மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி !

Tuesday, December 21, 2010

Mundhinam Paartheney - Vaaranam Aayiram Tamil Lyrics

Mundhinam Paartheney - Vaaranam Aayiram Tamil Lyrics

ஆண்: ஹாய் மாலினி... ஐ ஆம் கிருஷ்ணன்...
நான் இதை சொல்லியே ஆகனும்...
நீ அவ்வளவு அழகு...
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு...
இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க
I am love with you..

ஆண்: முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... (முன்தினம் பார்த்தேனே...)

(இசை...)

ஆண்: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே...

பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவோனோ... ஆருயிரே...

ஆண்: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வீணான ஒரு கனவு நூறு விடை சொல்லடி

பெண்: முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே..
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்..
எங்குதான் போனேனோ...
நாட்களும் வீணானதே...

(இசை...)

பெண்: கடல் நீரும் பொங்கும் நேரம்
அலைவந்து தீண்டும் தூரம்
மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே

ஆண்: தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்... தூரத்திலே...

பெண்: பகல் நேரம் கனாக்கள் கண்டேன்... உறங்காமலே...
உயிர் இரண்டும் உராயக்கண்டேன்... நெருங்காமலே...
உனையன்றி எனக்கு ஏது... எதிர்காலமே... (முன்தினம் பார்த்தேனே...)

ஆண்: வெண்ணிலா... வெண்ணிலா... வெண்ணிலா.....

Yethi Yethi Yethi - Vaaranam Aayiram Tamil Lyrics

 Yethi Yethi Yethi - Vaaranam Aayiram Tamil Lyrics

ஆண்: மச்சி மச்சி
 
குழு: மொரைச்சிட்டாண்டா
 
ஆண்: மடக்கி மடக்கி
 
குழு: அடிச்சிட்டாண்டா
 
ஆண்: அண்ணாநகரு
 
குழு: டவரு நீடா
 
ஆண்: மல்லுக்கட்டி அடிடா 
சக்கைப்போடு
 
குழு: போட்டுட்டாண்டா
 
ஆண்: சைக்கிள் கேப்பில்
 
குழு: கவுத்துட்டாண்டா
 
ஆண்: பார்ட்டி இப்போ
 
குழு: உனக்குத்தாண்டா
 
ஆண்: டொம்முனு கட்டிப்புடிடா

(இசை...)

ஆண்: ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்தி
ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைலைக் கொஞ்சம் மாத்தி
சூது வாது தெரியாது
சொக்கத் தங்கம் ராஜா
சுத்தும் பக்கம் கிடையாது
முகத்தைக் கழுவு லேசா
ராஜா நான் ராஜா
என் பேட்டைக்கென்றுமே ராஜா
ராஜா நான் ராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா
ராஜா நான் ராஜா
உன் திமிருக்கு எடுப்பாண்டா டாஜா
ராஜா நான் ராஜா
எனைத்தாங்கிப் பிடிங்கடா தாஜா (ஏத்தி ஏத்தி ஏத்தி...)

(இசை...)

ஆண்: பங்கடிச்சி தெரிஞ்சிக்குவோமே
கடைசியில படிச்சிக்குவோமே
சன்ரைஸைப் பார்த்ததில்லை கண்ணின் மணி
எங்களுக்கு இயேர்லி மார்னிங் பத்து மணி
லைட்ஹவுஸ் உயரத்தையும்
எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரீட்சையில் பதில் எழுத
பாதிப் பேப்பர்ல நொண்டும்
சுட்டாதான் நெருப்பு
பட்டாதான் பொறுப்பு (ஏத்தி ஏத்தி ஏத்தி...)

(இசை...)

ஆண்: தண்டாலு தினம் எடுப்போமே
பஸ்க்கியும் தான் பல அடிப்போமே
அர்னால்ட் போல ஏத்தி ஆம்சைப் பார்ப்போம்
ஏதாச்சும் சண்ட வந்தா ஆப்ஸ்கண்டாவோம்
ரவுண்டுக்கட்டி கௌப்புங்கடா
ரத்தம் சூடாக இருக்கு
பவருக்கட்டி நொருக்குங்கடா
பறக்க ரெக்கைகள் எதுக்கு
காத்தாடிப்போல போவோண்டா மேல (ஏத்தி ஏத்தி ஏத்தி...)

Ava Enna Enna - Vaaranam Aayiram Tamil Lyrics

Ava Enna Enna - Vaaranam Aayiram Tamil Lyrics

ஆண்: அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சல
அவ நெறத்தப்பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழகை சொல்ல வார்த்தைக்கூடப் பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல
அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சல
அவ நெறத்தப்பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழகை சொல்ல வார்த்தைக்கூடப் பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சுல
ஓ ஒன்னுக்குள்ள ஒன்னா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சிப் பிச்சித் தின்னா
அவ ஒத்த வார்த்த சொன்னா
அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கிப்போனா மண்ணா
ஓ ஒன்னுக்குள்ள ஒன்னா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கிப்போனா மண்ணா

(இசை...)

ஆண்: அடங்கா குதிரையப் போல
அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே
படுத்தா தூக்கமும் இல்லை
என் கனவுல தொல்லை
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால
எதுவோ எங்களை சேர்க்க
இருக்கி கயித்துல கோர்க்க
ஓ கண்ணாமூச்சி ஆட்டம் ஒன்று ஆடிப்பார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி
கைய காற்றுல நீட்டி
இன்னும் தேடுறேன் அவள
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ... (அவ என்ன என்ன...)

(இசை...)

ஆண்: வாழ்க்கை ராட்டிணம் தாண்டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொத நாள் உச்சத்தில் இருந்தேன்
நான் பொத்துன்னு விழுந்தேன்
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெழிஞ்சேன்
யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்
அது யாருஎன்ன ஒன்னும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளை இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்தைக் கௌப்பி
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ...
தனியா எங்கே போனாளோ... (அவ என்ன என்ன...)

Anal Mealey Panithuli - Vaaranam Aayiram Tamil Lyrics

Anal Mealey Panithuli - Vaaranam Aayiram Tamil Lyrics

பெண்: அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(இசை...)

பெண்: எந்தக்காற்றின் அலாவளில்
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மலரிதழ் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே
இதயத்திலே இதயத்திலே
உனது இருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை (அனல் மேலே பனித்துளி...)

(இசை...)

பெண்: சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுவாய் கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழிசொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடித்து
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட (அனல் மேலே பனித்துளி...)

Adiyae Kolluthey - Vaaranam Aayiram Tamil Lyrics

Adiyae Kolluthey - Vaaranam Aayiram Tamil Lyrics

ஆண்: அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே... (அடியே கொல்லுதே...)

(இசை...)

ஆண்: இரவும் பகலும் உன்முகம்
இரையைப் போலே துரத்துவதும் ஏனோ
முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ

பெண்: வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே
உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளதே
என் மீது பாய்ந்ததே
மழைக்காலத்தில் சரியும்
மண் சரிவைப் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக் கண்டேனே... (அடியே கொல்லுதே...)

(இசை...)
ஆண்: அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதை நான் தள்ளி நடப்பேனே
ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே

பெண்: சொன்னால் வார்த்தை என் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே
எல்லா பாதமும் மீண்டும் சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே
எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே...

ஆண்: அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே...
உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே...

பெண்: உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே...
என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே...

Onnappola aambalaya - Vel Tamil Lyrics

Onnappola aambalaya - Vel Tamil Lyrics

குழு: ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக

பெண்: ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே
ஒத்தையில கிட்ட வந்த திரும்பித்தானே நான் பாக்கலியே

ஆண்: ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம்
ஒலகத்தில தான் பஞ்சமடி
ஒத்தையில நீயும்வந்தா ஒடம்புக்குள்ளதான் கோடை இடி

பெண்: இது கனவானு தெரியல நனவானு புரியல
காய்ச்சல் இன்னும் கொறையல
என் காய்ச்சல் இன்னும் கொறையல
ஐசா ஐசா.. நைசா நைசா.. புதுசா புதுசா.. தினுசா தினுசா...
ஐசா ஐசா.. நைசா நைசா.. புதுசா புதுசா.. தினுசா தினுசா...

(இசை...)

பெண்: தென்னமரம் நீ தொட்டதும் தங்கமரம் ஆனதடா
 
ஆண்: தேக்குமரம் நீ பாத்ததும் பாக்குமரம் ஆனதடி

பெண்: முட்டக்கண்ணால மொறைக்காதடா
மூச்சுக் காத்தெல்லாம் புயலாகுது

ஆண்: மூணாங்கண்ணாலே புடிக்காதடி
மூல நரம்பெல்லாம் முறுக்கேறுது

பெண்: ஏய் மோதிபோட்ட மனசு கேடி போல தெறந்த
கோடி மொத்தம் நீ தானடா

ஆண்: ஐசா ஐசா.. நைசா நைசா.. புதுசா புதுசா.. தினுசா தினுசா..

குழு: ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக

(இசை...)

பெண்: வெ வெ வெங்காயப்பூ.. வெள்ள நிறம்
ஒன் சிரிப்பு.. வெள்ளி நிறம்

ஆண்: த த தக்காளிக்கு தங்க நிறம்
நீ நடந்தா மண்ணும் ஒரம்

பெண்: கனவுல என்ன நீயும் கட்டிப்பிடிச்சா
காயம் ரொம்பத்தான் ஆகுமடா

ஆண்: நெஜமா ஒன்னநானும் தொட்டுப் புடுச்சா
காயம் எல்லாமே ஆறுமடி

பெண்: நூத்தி எட்டுத்தடவ தோப்புக்கரணம் போட்டு
வேண்டுதல் நெரவேத்திக்கோ
 
ஆண்: ஏய் ஐசா நைசா... (ஒன்னப்போல...)

Thoppul kodi - Vel Tamil Lyrics

Thoppul kodi - Vel Tamil Lyrics

ஆண்: தொப்புள் கொடி சொந்தமொண்ணு தொலஞ்சு போனதே
அத்து விட்ட காயமது ஆரிப்போனதே
யாரு செஞ்ச பாவமிது எந்த நெஞ்சு தாங்குறது
தாய்புள்ள பாசமிது எந்த சாமி சேக்குறது
கண்ணுக்குள்ள இருந்ததெல்லாம் உண்மையானதே
காஞ்சுப்போன கண்ணீர் தடம் ஈரமானதே
பெத்ததாய்க்கு புள்ளவாசம் மறந்து போனதே
அடகாலம் செஞ்ச கோலம் மாறிப்போனதே

(இசை...)

ஆண்: ஒட்டி வந்த சொந்தமெண்ணு ஓரம் போனதே
அண்ணன் தம்பி பாசமது சோரம் போனதே
பாதையில தென்னம்புள்ள பாக்க இங்க யாருமில்ல
வேலியில நட்டச்செடி பூவத்தேட நாதிஇல்ல
கண்ணுக்குள்ள விழுந்த தூசி ஊசியானதே
பச்ச நெல்லு நாத்து இப்போ பாசியானதே
இவன் நெஞ்சுக்குள்ளே வீரம் கொறஞ்சு போனதே
அட ரெட்டப்புள்ள ஒத்தையா பிரிஞ்சு போனதே

Aayiram jannal - Vel Tamil Lyrics

Aayiram jannal - Vel Tamil Lyrics

ஆண்: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மனப் போலவே
இங்க அப்பத்தாவப் பாருங்க

ஆண்: ஏய் சுத்துறான் சுத்துறான் காதுலதான் சுத்துறான்
வீசுறான் வீசுறான் வலையத்தானே வீசுறான்

ஆண்: பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம் (ஆயிரம்...)

(இசை...)

ஆண்: வீரபாண்டித் தேரப் போல இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு இவங்களப் போல் யாரு
சித்தப்பாவின் மீசையப் பாத்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் கொழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்
கோழி வெரட்ட வைரக்கம்மல் கழட்டித்தானே எறிவாங்க
திருட்டுப்பயல புடுச்சுக்கட்ட கழுத்துச் செயின அவுப்பாங்க

ஆண்: காட்டுறான் காட்டுறான் கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான் வாயரொம்ப நீட்டுறான்

ஆண்: சொந்த பந்தம் கூட இருந்தா நெருப்புல நடக்கலாம்

குழு: வேலு அண்ணன் மனசுவச்சா நெருப்பயே தாண்டலாம் (ஆயிரம்...)

(இசை...)

ஆண்: சொக்கம்பட்டி ஊருக்குள்ள ஒடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள ஐரமீனும் சொல்லுது ஒன் பேரு
சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி நாட்டாமதான் யாரு யாரு
பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும் தாத்தாவோட பேரு
வாசக்கதவு தொரந்தே இருக்கும் வந்த சொந்தம் திரும்பாது
வேட்டையாடப் போனா ஐயா நூறு சிங்கம் புடிப்பாரு

ஆண்: ஐயோ வக்கிறான் வக்கிறான் ஐசத்தூக்கி வக்கிறான்
கட்டுறான் கட்டுறான் காரியமா கட்டுறான்

ஆண்: ஈரமுள்ள இதயமிருந்தால் ஈட்டியத்தான் தாங்கலாம்

குழு: வேலு அண்ணன் மனசவச்சா இன்னும் வீட்டில் தங்கலாம் (ஆயிரம்...)

ஆண்: கவுத்துட்டான் கவுத்துட்டான் குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டான் போட்டுட்டான் டேராவத்தான் போட்டுட்டான்

ஆண்: பாசமான புலிங்க கூட பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில் படிக்கட்டா மாறலாம்

ஆண்: ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது இதன் ஆணி வேரு யாரு

Kovakkaara kiliye - Vel Tamil Lyrics

Kovakkaara kiliye - Vel Tamil Lyrics

ஆண்: கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே...

(இசை...)

ஆண்: கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே...
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)

(இசை...)

ஆண்: ஏ... சூரியகாந்திப்பூவ போல முகத்த திருப்புரியே
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரிஓடுறியே

பெண்: ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொரத்துறியே

ஆண்: மயிலாப்பூரு மயிலே ஒரு எறகு போடம்மா
 
பெண்: என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா

ஆண்: உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல சரிதான் போடிபுள்ள

பெண்: மேயாத ஆணுமில்ல
மேயாட்டி புல்லுமில்ல சரிதான் தேவையா

ஆண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)

(இசை...)

பெண்: சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே

ஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே 
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே

பெண்: ஏய்... பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா
 
ஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிரே வப்பேனே

பெண்: பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..

ஆண்: கண்ணாடி பார்க்கவில்ல
முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா...

பெண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)

Otraikkannala - Vel Tamil Lyrics

Otraikkannala - Vel Tamil Lyrics

ஆண்: ஒற்றைக் கண்ணால உன்னைப் பார்த்தேனடி
ஒறங்கவில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி
ஒறங்கவில்ல என் மனசு
புரியலயே புரியலயே நீ யாருன்னு புரியலயே
தெரியலயே தெரியலயே இது காதல் தான்னு தெரியலயே
புரியாத பெண்ணைப் பார்த்தா
புதுசாத்தான் காதல் பூக்குதே காதல் பூக்குதே (ஒற்றை...)

(இசை...)

ஆண்: ஒ..... சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்க துடிக்கிதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெறுங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன்கால் தடங்கள் மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கை நகங்கள் விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணை பார்த்தால்
தெரியமால் காதல் பூக்குதே காதல் பூக்குதே (ஒற்றை...)

(இசை...)

ஆண்: ஓ.... கோடைக்கால சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத்தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணே பார்த்தால்
அறியாமல் காதல் பூக்குதே காதல் பூக்குதே ஹோ... (ஒற்றை...)

Indha ooril - Vel Tamil Lyrics

Indha ooril - Vel Tamil Lyrics

பெண்: பழநிமல உச்சியில பாரத்தெல்லாம் எறக்கிவச்சு
சொக்கம்பட்டி காட்டுக்குள்ள கரும்பு வெட்டும் காளைகளா...
கட்டெறும்பு காயப்படாம கணுக்கணுவா பாத்து வெட்டு

ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா..
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா..

(இசை...)

ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா..
 
குழு: நடக்காதுடா..

ஆண்: இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா..
 
குழு: கடிக்காதுடா..

ஆண்: ஹேய் வெட்டுறவன் வெட்டினா தித்திக்கும்டா கரும்பு
குத்துறவன் குத்துனா ரத்தம் கொட்டும் உடம்பு
வெட்ட வெட்ட வாழையாவோம்
கொட்ட கொட்ட தேனீயாவோம்
கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்

குழு: வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான் வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்

ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா
 
குழு: நடக்காதுடா

(இசை...)

ஆண்: பச்சரிசி பொங்கவச்சு பூஜ நடத்தணும்
 
குழு: நல்ல நாளு.. இந்த நாளு..

ஆண்: ஏ ஏ கட்டுக்கட்டா கரும்பெடுத்து கடிச்சு நொறுக்கணும்
 
குழு: நல்லா சொன்ன.. வேலு வேலு..

ஆண்: மருதமல முருகனுக்கு அலகு குத்தி வந்தோம்
மதுரைவீரன் சாமிக்குத்தான் அருவா அடிச்சு தந்தோம்
மாரியம்மன் காவலால் நல்லா இருக்கு ஊரு
அண்ணன் தம்பி போலதானே ஒண்ணா இருப்போம் பாரு
நல்ல எண்ணங்கள வெதையா வெதச்சாக்கா
மேகம் இல்லாம மழையடிக்கும்

குழு: சிலம்பெடுத்துப் போனா சூரியனத் தொடுவான் சிறகடிச்சுப் போனா சந்திரன புடிப்பான்

ஆண்: கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்

குழு: வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்

(இசை...)

குழு: ஏ தன்னனன நானே தன்னானன்ன நானே
தன்னனன நானே தன்னானன்ன நானே....
தன்னனன நானே தன்னானன்ன நானே
தன்னனன்ன தன்னனன்ன நானா...

ஆண்: வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு பழைய பேச்சுடா
 
குழு: ஆமா ஆமா வேலு வேலு

ஆண்: ஏ குண்டு ஒண்ணு போட்டா துண்டு நூறுடா
 
குழு: போட்டான் பாரு ஒரே போடு

ஆண்: அரசமரத்து புள்ளையாரு சுண்டலத்தான் கேக்கும்
எங்க ஊரு புள்ளை எல்லாம்
சண்டையத்தான் கேக்கும்
ஆறறிவு எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்
ஆறாவது விரலு மட்டும் சிலருக்குத்தான் இருக்கும்
சூரக்காத்திலையும் சூடம் ஏத்திடுவோம்
எதிரி எவனும் இங்கவர மாட்டான்...

குழு: வேலுக்கம்பு அருவா ஆயுதங்க எதுக்கு வேலு கூட இருந்தா வெற்றி தானே நமக்கு

Monday, December 20, 2010

Vizhi Moodi - Ayan Tamil Lyrics

Vizhi Moodi - Ayan Tamil Lyrics

ஆண்: விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக்காலம் என் வாழ்வில் வருமோ
மழைக்கிளியே மழைக்கிளியே
உன் கண்ணைக் கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே... (விழி மூடி...)

(இசை...)

ஆண்: கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே (விழி மூடி...)

(இசை...)

ஆண்: ஆசை என்னும் தூண்டில் முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்ட பின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டுத் தனியாய் சுற்றிப் பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாய வலையல்லவா.. புது மோன நிலையல்லவா..
உடை மாறும்.. நடை மாறும்..
ஒரு பாரம் எனை பிடிக்கும்.. (விழி மூடி...)

Oh Aayiyea Aayiyea - Ayan Tamil Lyrics

Oh Aayiyea Aayiyea - Ayan Tamil Lyrics

ஆண்: ஓ... ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ... வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
சாலையில் நடக்கிற நிலவு நீ
நீயும் நீயும் அடி நீதானா நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா
நீயும் நீயும் அடி நீதானா நீல நிற தீதானா
தீயில் தீயில் விழ தித்திக்கின்றேன் நான் தானா

பெண்: ஓ... ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ... வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவும் நீ

(இசை...)

ஆண்: ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும்
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும்
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே

பெண்: ஒரு கையில் ஒரு கையில் நகங்களும்
மறு கையில் மறு கையில் சுகங்களும்
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே

ஆண்: இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கே
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன்

ஆண்: ஓ... ஆயியே ஆயியே ஆயியே ஆயி
தூவும் பூ மழை நெஞ்சிலே
ஓ... வாசமே சுவாசமே வாசமே வந்து
மையல் கொண்டது என்னிலே

பெண்: நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து
கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ
என் கையில் வளைந்து என் மீது மிதந்து
மாலையில் நடக்கின்ற நினைவும் நீ

(இசை...)

பெண்: இமைக்காத இமைக்காத கண்களும்
எனக்காக எனக்காக வேண்டினேன்
உனைக் கண்டு உனைக் கண்டு ரசித்தேனே

ஆண்: முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும்
இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும்
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே

பெண்: சுடும் பூங்காற்றே சுட்டுப்போகாதே
இனி நானிங்கே மழைச் சாரல் பூவாய் (ஓ... ஆயியே...)

Pala Palakkura - Ayan Tamil Lyrics

Pala Palakkura - Ayan Tamil Lyrics

ஆண்: பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ
அனலடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ
மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ
சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை
கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை
வானவில்லை போலே இளமையடா
தினம் புதுமையடா அதை அனுபவிடா
காலங்காலமாக பெரிசுங்கடா ரொம்ப பழசுங்கடா
நீ முன்னே முன்னே வாடா வாடா (பளபளக்குற பகலா நீ...)


(இசை...)

ஆண்: எட்டித்தொடும் வயது இது
ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால்
அதன் இருபக்கம் கூரிருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால்
அந்த சூரியனில் செடி முளைக்கும்
புலன்களை அடக்கி வைத்தால்
தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்
காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி
பல இன்பம் அள்ளிசேர்த்து ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ (பளபளக்குற பகலா நீ...)

(இசை...)

ஆண்: இதுவரை நெஞ்சிலிருக்கும்
சில துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து
தொடுவானம்வரை போய் வருவோம்
அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும்
வா வேற என்ன வேண்டும் வேண்டும் (பளபளக்குற பகலா நீ...)

Nenje Nenje - Ayan Tamil Lyrics

Nenje Nenje - Ayan Tamil Lyrics

பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே... என் வாழ்வும் அங்கே...
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் எங்கே... என் ஜீவன் எங்கே...


ஆண்: என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய் (நெஞ்சே நெஞ்சே...)

(இசை...)

ஆண்: கண்ணே என் கண்ணே நான் உன்னைக் காணாமல்
வானும் இம்மண்ணும் பொய்யாகக் கண்டேனே

பெண்: அன்பே பேரன்பே நான் உன்னைச்சேராமல்
ஆவி என் ஆவி நான் இற்றுப் போனேனே

ஆண்: வெயிற்காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசியாகும்

பெண்: உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அனலாகும் (நெஞ்சே நெஞ்சே...)

(இசை...)

பெண்: கள்வா ஏ கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே

ஆண்: காதல் மெய் காதல் அது பட்டுப்போகாதே
காற்று நம் பூமி தனை விட்டுப்போகாதே

பெண்: ஆகாயம் இடம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறிப் போகக்கூடாதே

ஆண்: ஏ மச்சத் தாமரையே என் உச்சத் தாரகையே
கடல் மண்ணாய்ப் போனாலும் நம் காதல் மாறாதே

பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே... என் வாழ்வும் அங்கே...

 
ஆண்: அன்பே அன்பே நான் இங்கே
தேகம் எங்கே... என் ஜீவன் எங்கே...
என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய்
வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய்

பெண்: உன் தாகங்கள் தீராமல் மழையை ஏன் வைகிறாய்

Hey Honey Honey - Ayan Tamil Lyrics

Hey Honey Honey - Ayan Tamil Lyrics

பெண்: ஹேய் ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹேய் மெனி மெனி மணி மணி நானே முதல் கனி
ஹேய் ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹேய் மெனி மெனி மணி மணி நானே முதல் கனி


பெண்: கன்னி இவள் கணினி
 
ஆண்: அடடா

பெண்: கள் அவிழும் பதனி
 
ஆண்: அது தான்

பெண்: கண்ட இடம் தொடு நீ
இது காதல் கொண்ட மேனி

பெண்: கொஞ்சம் இதை கவனி
 
ஆண்: அடடா

பெண்: கொஞ்சுவதில் வதனி
 
ஆண்: அது தான்

பெண்: அஞ்சுமுடல் அவனி
உன் ஆசை சொல்ல வா நீ

பெண்: குத்து மதிப்பாக.. முத்துப் பதிப்பாக..
மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக
கொஞ்சம் இனிப்பாக.. கொஞ்சம் புளிப்பாக..
முத்தமிட்டு முத்திமிட்டு முக்தி அடைக (ஹேய் ஹனி ஹனி...)

(இசை...)

ஆண்: யே மை ஸ்வீட் ஸ்டிக்கி ஹனி கிவ் மி ஆல் யுவர் லவ்
அன்ட் ஐ வில் கிவ் யு ஆல் மை மனி
யே யூ ஆர் மை கட் லிட்டில் டார்லிங்
ஐ வண்ண லவ் யூ லவ் ஆல் நைட் லாங் இன்
ஆ வண்ண ஷேக் தட் பாடி கம் ஆன் கேர்ல்
ஐ வண்ண ஷேக் யுவர் பாடி யு அன்ட் மி
ஆல் நைட் லாங் ஆல் நைட் லாங் அன்ட் ஐ சிங்கிள் திஸ் சாங்

பெண்: அழகானது லிப்ஸோட லிப்ஸி... இரவானது எப்பவும் செக்ஸி...
சூடானது பெண் எனும் பெப்ஸி... சுகமானதே சுவாசி...

ஆண்: ஏய் வெள்ளை அழகே.. என் உள்ளம் உனக்கே..

பெண்: ஆ... மிஸ்ஸானது நெஞ்சுல நெஞ்சு... பிக்ஸானது தீயில பஞ்சு...
கிக்ஸ்ஸானது என்னென்ன செஞ்ச... லிப்ஸானது கொஞ்சு...

பெண்: ஹலோ சுகவாசி என்னை வந்து சுவாசி
வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு
ஆக்டோபஸ் பேபி நான் தான் உந்தன் டிராஃபி
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு (ஹேய் ஹனி ஹனி...)
(இசை...)

பெண்: ஒரு மாதிரி பார்த்தது யாரு... அது மாதிரி பேசியதாரு... புது மாதிரி தொட்டது யாரு... என் மாதிரி யாரு...

ஆண்: நீ கண்ணை அசைக்க.. நான் உன்னை இசைக்க..

பெண்: க்யூட்டாகவே என்னோட பேசி... மியூட்டாகவே என்னோட ஊசி...
லைட்டாகவே என்னையும் வாசி... நைட்டானது ராசி...

பெண்: ஆலிவ் எண்ணைய் காலு ஆப்பிள் கலர் தோலு
ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு
ரம்மில் செஞ்ச ஐசு ஜின்னில் செஞ்ச டைசு
மொசு மொசு மொசுன்னு தான் இந்த அழகு (ஹேய் ஹனி ஹனி...)

Nee Oru Nimisham - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics

Nee Oru Nimisham - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics


ஆண்: என் இராசாத்திக் கிளியே இராசாத்திக் கிளியே
 நான்தான் நாளெல்லாம் தவமிருந்தேன்
 நான் நம்பி கெடந்ததெல்லாம் நம்பலியோ மனசு
 இப்போ வெம்பி வதங்குதடி வெறும் சறுகா போனதடி
 தெம்பும் கொறைஞ்சதடி தெசையெல்லாம் மாறுதடி

(இசை...)

ஆண்: நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
 உன் கழுத்தில் என் தாலி
 ஒத்திக்கிட்டு நீ இருந்தா
 ஒடையுமடி பெறும் வேலி

 (இசை...)

ஆண்: என் சின்னப் பசுங்கிலியே சித்திரமே இரத்தினமே
 என்னத் தவிக்கவிட்டு எப்படிதான் வாழுவியோ
 கண்ணங்கருப்புக்குள்ளே காணாம எனை தொலைச்சேன்
 என்னதான் மீட்டுத்தர எந்த சாமி வரம் கொடுக்கும்
 எந்த சாமி வரங்கொடுக்கும்

 (இசை...)

ஆண்: நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
 உன் கழுத்தில் என் தாலி
 ஒத்திக்கிட்டு நீ இருந்தா
 ஒடையுமடி பெறும் வேலி

 (இசை...)

ஆண்: என் சாதி சனம் தடுத்திருந்தா சத்தியமா கொன்னுருப்பேன்
 மோதி சண்ட போட்டுப்புட்டு மூச்சடக்கிப் போயிருப்பேன்
 பாவி மகளே நீ பாதியிலே கொன்னுப்புட்ட
 ஆவி துடிக்குதடி அத்தனையும் அந்ததடி
 அத்தனையும் அந்ததடி

 (இசை...)

ஆண்: நீ ஒரு நிமிஷம் காத்திருந்தா
 உன் கழுத்தில் என் தாலி
 ஒத்திக்கிட்டு நீ இருந்தா
 ஒடையுமடி பெறும் வேலி

Naan Dharmanda - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics

Naan Dharmanda - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics

ஆண்: நான் தருமன்டா.. பேட்ட மவராசா..
 கேட்டா தரமாட்டான்
 கோட்ட தொடமாட்டான்
 ஆடிப்பாட சலச்சவனில்ல
 அட அதுக்கும் எடமுமில்ல
 பாட்டுபாடி களைச்சவனில்ல
 இவன் கானக்கவிஞன் இல்ல
 இவன் புடிச்சா உடமாட்டான்
 நீ அழைச்சா வர மாட்டான்
 இந்த பூலோகம் செஞ்சா தவம்
 எடுத்தேன் நான் இந்த அவதாரம்
 ஓய் ஓய் ஓய் ஓய்
 ஏ இங்கப்பாரு பின்னாலப் பரிவாரம்
 ஓய் ஓய் ஓய் ஓய் (நான் தருமன்டா...)

(இசை...)

ஆண்: ஏய் கூட்டம் கும்மாளம் போட்டு
 என் கூட எப்போதும் பாராட்டும்
 பாட்டன் இல்லாத ஆளு
 நான் ஓடுற ஓட்டம் தேரோட்டம்
 இஷ்டம் போல வாழ்ந்து முடிப்போம்
 கஷ்டம் வந்தாக்கா கல்லால அடிப்போம்
 அதிஷ்ட தொழில தினமும் முடிப்போம்
 யாரு வந்தாலும் ஆதரிப்போம்
 இது தும்பிக்கிட்டு... வரும் காளையடா...
 தெனம் தேடிக்கிட்டு வரும் மாலையடா
 இவன் தென்பாண்டி நாட்டு சிங்கமடா.. (நான் தருமன்டா...)

 (இசை...)

ஆண்: ஏய் காஞ்ச கருவாடு மணக்கும்
 அட காட்சின தண்­ரும் ருசி இனிக்கும்
 நஞ்சை எடங்கூட மொளைக்கும்
 இவன் ஓஞ்சப் பின்னாலும் உறவிருக்கும்
 மாத்தி மாத்தி போட்டுக் குடிப்பான்
 படிக்கத் தெரியாது காதைக் கடிப்பான்
 போத்தி இழுத்து படுத்ததில்ல
 பொட்டப் புள்ளைக்குப் புடிச்சதில்ல
 ஒரு சங்கீதத்த இவன் தொட்டதில்ல
 ஆனா பாட்டு மட்டும் எட்டுக்கட்டையில
 இவன் பக்கத்தில் யாரும் எட்டவில்ல (நான் தருமன்டா...)

Muttathu Pakkathila - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics

Muttathu Pakkathila - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics

ஆண்: முட்டத்துப் பக்கத்துல டெண்ட்டுக் கொட்டாயி
 ஏய் கட்டுக் கரும்புக்கட்டு வாடி வீராயி
 இத முறுக்கு புடிச்சி நொறுக்கு
 கட்டி நெருக்கு இன்னும் இருக்கு
 அந்த பழையப்பாட்ட தூக்கிப்போடு
 இந்தப் பாட்டப் பாடி போடு (முட்டத்துப் பக்கத்துல...)

 (இசை...)

ஆண்: தண்ணிக்குடம் தூக்கிக்கிட்டு
 சாஞ்சபடி பாத்துக்கிட்டு
 பொண்ணு ஒன்னு போறவழி
 போகுதடா ஊருவலம்
 அவ இடுப்பில் இருக்கும் வசியும்
 பாத்தா எப்படி நமக்கு பசிக்கும்
 அத நெனைக்க நெனைக்க ருசிக்கும்
 அத நாவுல எங்கடா கசக்கும்
 இராத்திரி ஆட்டத்துக்கு நான் தான் பாட்டாளி
 ஓய் போக்கிரி கூட்டத்துக்கு ஏத்தக்கூட்டாளி
 எங்கப் பழக்கும்
 உங்களக் கலக்கும்
 உடம்பு இழுக்கும்
 உள்ளுக்குள்ள இழுக்கும்
 இது டைமு பாரு வாடையில்
 இதுக்கு டிக்கெட் தேவையில்ல
 இராத்திரி ஆட்டத்துக்கு நான் தான் பாட்டாளி
 போக்கிரி கூட்டத்துக்கு ஏத்தக்கூட்டாளி

 (இசை...)

ஆண்: ஆளு இல்லா ஆலமரம்
 அங்க ஒரு ஊஞ்சல்கட்டி
 ஆடுதடா இஷ்டப்படி
 ஆளுக்கொரு வீடுகட்டி
 இது கொட்டமடிக்கிற வயசு
 இள வாலிபம் பண்ணுர ரவுசு
 கொஞ்சம் நெனைக்க நெனைக்கப் பெருசு
 நம்ம நினப்பில் ஏது சிறுசு சிறுசு
 சின்ன வயசுப்புள்ள சேர்ந்தா சந்தோசம்
 பின்னி ரவுண்டுகட்டும் வேணாம் சந்தேகம்
 ஒன்னுத் தொடுவோம் அப்புறம் விடுவோம்
 கண்டு எடுப்போம் காட்டிக் கொடுப்போம்
 இது கிராமத்துக்கு இராசாப்பாட்டு எப்போதுமே கூசா தூக்கே...
 சின்ன வயசுப்புள்ள சேர்ந்தா சந்தோசம்
 பின்னி ரவுண்டுகட்டும் வேணாம் சந்தேகம்
 சின்ன வயசுப்புள்ள சேர்ந்தா சந்தோசம்
 பின்னி ரவுண்டுகட்டும் வேணாம் சந்தேகம்
 ஒன்னுத் தொடுவோம் அப்புறம் விடுவோம்
 கண்டு எடுப்போம் காட்டிக் கொடுப்போம்
 இது கிராமத்துக்கு இராசாப்பாட்டு எப்போதுமே கூசா தூக்கே...

Chinnansirusuka Manasukkul - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics

Chinnansirusuka Manasukkul - Kunguma Poovum Konjum Puravum Tamil Lyrics

ஆண்: தானனா தந்தானனா நன தன்னானனா ஒ ஒ ஒ...

பெண்: தானனா தந்தானனா நன தன்னானனா ஒ ஒ ஒ...

ஆண்: சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
 சின்னத்தூரல் போட

பெண்: புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
 பட்டுப்பூக்கள் பூக்க

ஆண்: பொதுவாக பருவம் ஒரு பூந்தோட்டமாச்சு

பெண்: மெதுவாக பழக்கம் ஒரே நீரோட்டமாச்சு

ஆண்: விலகாத உறவு ஒரு கொண்டாட்டமாச்சு (புத்தம் புதுசாக...)

 (இசை...)

பெண்: சிடுமூஞ்சி நீதான் என்று சொல்லிச்சொல்லி
 கிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன சேட்டை செய்தேனா...

ஆண்: சந்து பொந்தில் நீதான் வந்தா ஒத்திப்போக ஒத்துக்காம
 சண்டியர் போல் வம்பு செய்தேனா...

பெண்: அரை டிராயர் போட்ட பையன் நீ
 பாடாத லாவனி

ஆண்: விரல் சூப்பி நின்ன புள்ள நீ
 போட்டாச்சு தாவணி
 விளையாட்டா இருந்த முகம் ஏன் வெளிறிப்போச்சு

பெண்: வேறென்ன பூப்பு அடைந்த
 விவரம் தெரிஞ்சாச்சு

ஆண்: குறும்பாட்டா திரிஞ்ச பொண்ணு
 ஏன் குமரியாச்சு

பெண்: வேறென்ன உடம்பு உனக்கு
 வழங்க முடிவாச்சு

 (இசை...)

ஆண்: மண்ணாலதான் வீடு கட்டி
 நானும் நீயும் வாழுறப்போ
 மீன் கொழம்பு ஆக்கிப் போட்ட நீ

பெண்: கமரக்கட்டு கடலை முட்டாய்
 வாங்கினாக்க வாயில் வச்சு
 காக்காக் கடி கடிச்சு திண்பாய் நீ

ஆண்: கருவாட்டைப் போல தீயில
 என் நெஞ்சை வாட்டுன

பெண்: அலங்கார அம்மன் கோவிலில்
 கண்ஜாடை காட்டின
 அடி ஆத்தி மனசுக்குள்ள பூ வச்சதாரு

ஆண்: வேறாரு ஆடி அசையும் அழகுமணித் தேரு
 அடி ஆத்தி நெனப்புக்குள்ள போய் நின்னதாரு

பெண்: வேறாரு கூச்சம் நிறுத்த
 ஈச்சம் மரப்பாய் வா

ஆண்: சின்னஞ்சிறுசுக மனசுக்குள் சிலுசிலுன்னு
 சின்னத்தூரல் போட

பெண்: புத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு
 பட்டுப்பூக்கள் பூக்க

Tottodaing - Asal Tamil Lyrics

Tottodaing - Asal Tamil Lyrics

பெண்: அடிச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னத்தான்
 எப்போதுமே உண்ணா நீ என்னத்தான்

பெண்: அதிரி புதிரி பண்ணிக்கடா
 எதிரி உனக்கு இல்லையடா
 தொட்டதெல்லாம் வெற்றியடா
 தொடாததும் தொட்டுக்கடா
 கண்களால் தொட்டதும் கற்பு பதறுதே
 உன் கையால் நீ தொட்டாய் கன்னி மொட்டுக்குள்ள
 டொட்டொடொய்.... டொட்டொடொய்....

ஆண்: அதிரி புதிரி பண்ணட்டுமா
 எகிறி எகிறி தள்ளட்டும்மா
 பின்னழகை திண்ணட்டுமா
 பிச்சி பிச்சி திண்ணட்டுமா
 காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே
 முழு முத்தம் நீ இட்டால் என் முதுகுதண்டுக்குள்ளே
 டொட்டொடொய்.... டொட்டொடொய்....

 (இசை...)

பெண்: ரெண்டுபேரும் குடிக்கணுமே ரெட்டை இதழ் தீம்பால்
 எத்தனை நாள் தின்ன இட்லி வடை சாம்பார்

ஆண்: முக்கனியில் ரெண்டுக்கனி புட்டுத்திங்க ஆசை
 அப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோச

பெண்: பணயக் கைதிபோல என்னைய ஆட்டிப்படைக்கிற
 பங்குச்சந்தையப் போல என்னை ஏத்தி இறக்குற

ஆண்: ஏய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற
 கத்திக்கண்ணு வத்தி வச்சா என் உச்சி மண்டையில
 டொட்டொடொய்.... டொட்டொடொய்....

 (இசை...)

ஆண்: பச்சப்புள்ள போல் இருப்பாள் அச்சங்கெட்ட பாப்பா
 நெஞ்சுக்குள்ள வச்சதென்ன முந்திரிக்கா தோப்பா

பெண்: கத்திரிக்கா மூட்டைப்போல கட்டழகு சீப்பா
 உரம் போட்டு வளத்ததுபா பொத்திக்கிட்டு போப்பா

ஆண்: ஏப்ரல் மாத ஏரிப்போல ஹார்ட்டு எறங்குதே
 தங்கம் விலையப்போல சும்மா ஸ்கர்ட்டு ஏறுதே

பெண்: உத்தியில் எப்பவும் தண்டு ஊறுதே
 பச்சிபச்சி இச்சி வச்சா நரம்பு மண்டலத்தில்
 டொட்டொடொய்.... டொட்டொடொய்....

ஆண்: ஏய்.. அதிரி புதிரி பண்ணட்டுமா
 எகிறி எகிறி தள்ளட்டும்மா
 பின்னழகை திண்ணட்டுமா
 பிச்சி பிச்சி திண்ணட்டுமா
 காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே
 முழு முத்தம் நீ இட்டால் என் முதுகுதண்டுக்குள்ளே
 டொட்டொடொய்.... டொட்டொடொய்....
 டொட்டொடொய்.... டொட்டொடொய்....
 டொட்டொ..டொய்......

Thala Pola Varuma - Asal Tamil Lyrics

Thala Pola Varuma - Asal Tamil Lyrics

பெண்: காற்றை நிறுத்திக் கேளு
 கனலை அழைத்துக் கேளு
 அவன்தான்.... அசல் என்று சொல்லும்....
 பழமை செய்வதில் கொம்பன்
 கடவுள் இவனுக்கு நண்பன்
 நம்பிய பேருக்கு மன்னன்
 நன்றியில் இவன் ஒரு கர்ணன்
 அடடா அடடா தலபோல வருமா

குழு: தல போல வருமா... தல போல வருமா...
 தல போல வருமா... தல போல வருமா...

 (இசை...)

பெண்: காற்றில் ஏறியும் நடப்பான்
 கட்டாந் தரையிலும் படுப்பான்
 எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான்
 எமனுக்கு டீ கொடுப்பான்
 முகத்தில் குத்துவான் பகைவன்
 முதுகில் குத்துவான் நண்பன்
 பகையை வென்றுதான் சிரிப்பான்
 நண்பரை மன்னித்தருள்வான்
 போனான் என்று ஊர்பேசும்போது
 புயல் என வீசுவான்
 பூமிப்பந்தின் ஒருபக்கம் மோதி
 மறுபுறம் தோன்றுவான்
 தோட்டங்களில் பூக்களிலும் தோட்டா தேடுவான்
 தோழர்களில் பகைவர்களையும் சுட்டே வீழ்த்துவான்
 மாயமா... மந்திரமா....

குழு: தல போல வருமா... தல போல வருமா...
 தல போல வருமா... தல போல வருமா...

 (இசை...)

பெண்: நித்தம் நித்தமும் யுத்தம்
 இவன் எச்சில் குளத்திலும் ரத்தம்
 நெற்றி நடுவிலும் சத்தம்
 நிம்மதி இவனுக்கில்லை
 படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம்
 படுக்கை முதுவதும் வெட்கம்
 காட்டுச்சிங்கம் போல் வாழ்ந்தும்
 கண்களில் உறக்கமில்லை
 ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை
 இழிவென்று ஏசுவான்
 உன்னை நம்பி நீ வாழும் வாழ்க்கை
 உயர்வென்று பேசுவான்
 சட்டங்களின்... வேலிகளை... சட்டென்று தாண்டுவான்...
 தர்மங்களின்... கோடுகளை... தாண்டிட கூசுவான்...
 மாயமா.... மந்திரமா....

குழு: தல போல வருமா... தல போல வருமா...
 தல போல வருமா... தல போல வருமா...
 தல போல வருமா... தல போல வருமா...
 தல போல வருமா... தல போல வருமா...

Kuthiraikku Theriyum - Asal Tamil Lyrics

Kuthiraikku Theriyum - Asal Tamil Lyrics

பெண்: குதிரைக்குத் தெரியும் குதிரைக்குத் தெரியும்
 தனக்கொரு ஜாகிங் யார் என்று
 குமரிக்கும் தெரியும் குமரிக்கும் தெரியும்
 எனக்கொரு ஜாகிங் நீ என்று
 குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்
 புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு
 அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து
 கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு
 காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது
 தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..
 முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..
 அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..
 இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..
 குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்
 புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு
 அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து
 கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு

 (இசை...)

பெண்: குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்..
 குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்.. குதிரைக்குத் தெரியும்..

பெண்: எங்கெங்கு என்னென்ன தேவை
 எங்கெங்கு என்னென்ன சேவை
 அங்கங்கு அன்போடு செய்வாய் அன்பாய்
 நெஞ்சோடு பாய்கின்ற வேளை
 நீகொஞ்சம் ஓய்கின்ற வேளை
 நான் கொஞ்சம் மானாக வேண்டும் நண்பா

பெண்: விதவிதமா புதியகலை.. விடியும்வரை சரசமழை..
 ஆடைகளும் நாணங்களும் அவசரத்தில் தேவையில்லை
 காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது
 தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..
 முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..
 அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..
 இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..
 குதிக்கும் குதிரையை குறிவைத்து அடக்கும்
 புஜவலி உனக்கு நிஜவலி எனக்கு
 அழகாய் கொழுத்து அந்தரத்தில் பழுத்து
 கொடிவைத்த கனிகள் வழிவிட்டு கெடக்கு

ஆண்: அழகிய பெண்கள் எமனின் கண்கள்
 மூடிய விழிகள் விசங்களின் குளங்கள்
 மார்பின் பழங்கள் மரணப்பழங்கள்
 பறக்கும் கூந்தல் பாசக்கயிறு
 அறிவேன் பெண்ணே... அகப்பட மாட்டேன்...
 அகழியில் விழுந்தால்... சுகப்பட மாட்டேன்...

 (இசை...)

பெண்: மேல்நாடு பாராத கண்ணும்
 கீழ் நாடு பாராத ஆணும்
 வாழ்ந்தென்ன வாழ்ந்தென்ன யோகம் இல்லை
 ஓஹோ ஓஹோ ஓ...
 மோகங்கள் தீர்க்காத ஆணும்
 தாகங்கள் தீர்க்காத நீரும்
 லோகத்தில் வாழ்ந்தென்ன லாபம் இல்லை
 இவருக்குள்ளே இறந்துவிடு
 இதயத்திலே புதையல் எடு
 ஒவ்வொரு தினமும் குளித்துவிடு
 உயிருக்குள்ளே உறங்கிவிடு

பெண்: காணா அழகே கண்ணடிச்சு அழைக்குது
 தொட்டுவிடு ஒருதரம்.. தொல்லைகொடு இருதரம்..
 முத்தமிடு மூணுதரம்.. முகத்தினில் நாலுதரம்..
 அள்ளி அணை ஐந்துதரம்.. கொள்ளையிடு ஆறுதரம்..
 இந்த துணை ஏழு தரம்.. இந்த சுகம் நிரந்தரம்..
 குதிக்கும் குதிரையை...
 குறிவைத்து அடக்கும்...
 புஜவலி உனக்கு...
 நிஜவலி எனக்கு...
 அழகாய் கொழுத்து...
 அந்தரத்தில் பழுத்து...
 கொடிவைத்த கனிகள்...
 வழிவிட்டு கெடக்கு...

Yea Dushyantha - Asal Tamil Lyrics

Yea Dushyantha - Asal Tamil Lyrics

பெண்: ஏய் துஷ்யந்தா... ஏய் துஷ்யந்தா...
 உன் சகுந்தலா... தேடி வந்தாள்...
 ஏய் துஷ்யந்தா... நீ மறந்ததை...
 உன் சகுந்தலா... மீண்டும் தந்தாள்...

ஆண்: கள்ள பெண்ணே என் கண்ணை சுத்தும் கண்ணே
 என் கற்பை திருடும் முன்னே
 நான் தப்பாய்விட்டு தப்பி வந்தேன்
 மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
 என் நெஞ்சைகொத்தித் தின்றாய்
 எனக்கு உன்னை நினைவில்லையே

பெண்: பூங்காவில் மழை வந்ததும்
 புதர் ஒன்று குடையானதும்
 மழை வந்து நனைக்காமலே
 மடிமட்டும் நனைந்ததே மறந்தது என்ன கதை
 ஏய் துஷ்யந்தா... ஏய் துஷ்யந்தா...
 உன் சகுந்தலா... தேடி வந்தாள்...

 (இசை...)

பெண்: அழகான பூக்கள் பூக்கும் தேனாற்றங்கரையில்
 அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்
 இருள்கூட அறியாத இன்பங்களின் முகத்தில்
 இருபேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில்
 வருடித் தந்தாய் மனதை
 திருடிக் கொண்டாய் வயதை
 அது கிளையோடு வேர்களும் பூத்தக்கதை
 ஆலாலங்காட்டுக்குள் ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே
 உன்னை போர்த்திக்கொண்டு படுத்தேன்
 பாலாற்றில் நீராடும்போது துவட்ட துண்டு இல்லை
 கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

பெண்: அந்த நீலநதிக் கரையோரம்
 நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
 நான் பாடிவந்தேன் ஒரு ராகம்
 நாம் பழகி வந்தோம் சில காலம்

பெண்: ஏய் துஷ்யந்தா... ஏய் துஷ்யந்தா...
 உன் சகுந்தலா... தேடி வந்தாள்...
 (இசை...)

பெண்: மான் ஆடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்
 மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில்
 ஹா....
 கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்
 கருநீல போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம்
 பகலில் எத்தனை கனவு
 இரவில் எத்தனை நனவு
 தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு
 சம்மதம் கேளாமல் என்னை சாய்த்து சாய்த்துக்கொண்டு
 சட்டென்று சட்டென்று முத்தம் தந்தாய்
 மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை மடியில் போட்டுக்கொண்டு
 புல்லில்லா தேகத்தை கொஞ்சம் மேய்ந்தாய்

பெண்: அந்த நீலநதிக் கரையோரம்
 நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
 நான் பாடிவந்தேன் ஒரு ராகம்
 நாம் பழகி வந்தோம் சில காலம்

பெண்: பார்த்த ஞாபகம் இல்லையோ
 பருவ நாடகம் தொல்லையோ
 வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
 மறந்ததேன் இந்த நெஞ்சமோ
 ஏய் துஷ்யந்தா...
 ஏய் துஷ்யந்தா...
 ஏய் துஷ்யந்தா...
 ஏய் துஷ்யந்தா...

Wednesday, December 15, 2010

Life A Jaali Than - Kutty Tamil Lyrics

Life A Jaali Than - Kutty Tamil Lyrics

ஆண்: ஹேய் ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து சௌத்து
 எங்கும் எங்கள் யூத்து கூத்து
 வாஸ்த்து பார்த்து வாழாத லைப்பே ஜாலிதான்
 ஹேய் ஹாட்டு கோல்டு ஸ்வீட்டு சால்ட்டு
 எதுவேனாலும் பாரு டேஸ்ட்டு
 திட்டம் போட்டு வாழாத லைப்பே ஜாலிதான்
 ஹேய் எக்சாமினேசன் அடிக்கடி ட்யூசன்
 எல்லாமே போனால் ஜாலிதான்
 திட்டாத டாடி தித்திக்கும் ஜோடி இருந்தா ஜாலிதான்
 ஹேய் கைகளை ரெக்கையா மாத்து ஜாலிதான்
 குழந்தையின் பாசை புரிஞ்சா ஜாலிதான்
 அட ஜாலிதான்
 குடை இருந்தாலும் நனைஞ்சா ஜாலிதான்
 அடிக்கடி மனச தெறந்தா ஜாலிதான்
 அட ஜாலிதான்
 மனசுக்கு புடிச்சத ரசிச்சா ஜாலிதான்

 (இசை...)

ஆண்: அரும்பாக மீசை வரும்போது
 விரலாலே மெல்ல தொடும்போது
 மனதோடு தோன்றும் சந்தோசம் ஜாலிதான்
 மிளகாயப் போல பேசாம
 மெதுவாக அன்பா நீ பேசு
 கொலைகாரன்கூட குழந்தைன்னா ஜாலிதான்
 கராத்தே குங்பூ தெரிகிறபோதும்
 நண்பனிடம் தோத்தால் ஜாலிதான்
 அலாரம் வைத்து விடியலில் எழுந்து தூங்கு ஜாலிதான்
 ஹேய்.... தூரலில் ஜன்னலின் ஓரம் ஜாலிதான்
 எமனிடம் ஜோக்கு அடித்தால் ஜாலிதான்
 அட ஜாலிதான்
 எரிமலையில் குளிர் காய்ந்தால் ஜாலிதான்
 ஹேய் இளமையை முழுசாய் ரசிச்சா ஜாலிதான்
 அட ஜாலிதான்
 முதுமையை மனசில் மதிச்சா ஜாலிதான்
 ஹேய் ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து சௌத்து
 எங்கும் எங்கள் யூத்து கூத்து
 வாஸ்த்து பார்த்து வாழாத லைப்பே ஜாலிதான்

 (இசை...)

ஆண்: பல நூறு ஆண்டு முன்னால
 உன் வீடும் தெருவும் உனதில்ல
 புரிந்தாலே வாழ்க்கை எப்போதும் ஜாலிதான்
 பல நூறுபேரை வென்றாலும்
 அது வீரம் என்று ஆகாது
 மனதார மன்னிக்கும் வீரம் ஜாலிதான்
 பொறாமை கோபம் இல்லாம வாழ
 உன்னால முடிஞ்சா ஜாலிதான்
 எல்லோரும் போல வாழாமா புதுசா இருந்தா ஜாலிதான்
 ஹேய்... இலட்சியம் ஆகிற கனவு ஜாலிதான்
 ஜெயிக்கிற போது அழுகை ஜாலிதான்
 அட ஜாலிதான்
 தோல்வியைக் கண்டு சிரிச்சா ஜாலிதான்
 டா டா டா
 அடுத்தவன் தாகம் புரிஞ்சா ஜாலிதான்
 அட ஜாலிதான்
 அடிக்க வந்தவனை அணைச்சா ஜாலிதான்

Oru Malai Neram - Naan Mahaan Alla Tamil Lyrics

Oru Malai Neram - Naan Mahaan Alla Tamil Lyrics

ஆண்: ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
 என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு

பெண்: வழிதோறும் பூக்கள் வாழ்த்து சொன்னது கைதொட்டு
 இது கடவுள் எழுதி காதில் பாடும் தாலாட்டு

ஆண்: இதழோரம் இதழோரம் புதிதாக புன்னகை ஒன்று
 எப்போதும் பார்த்தேனே சில நாளாய் நானே
 கதவோரம் தலை நீட்டி தினம் பார்க்கும்
 சிறு பிள்ளை போலே என்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க...

ஆண்: ஓ... ஒரு மாலை நேரம் வந்தது வந்தது பூங்காற்று
 என் மனதின் ஓரம் சென்றது சென்றது பூ போட்டு

 (இசை...)

பெண்: தினம் உனை பார்க்கும்போது இடையினில் தோன்றும் அந்த
 ஊடலாம் அன்பே ஐய்யோ அழகானது

ஆண்: தனிமையில் நீயும் நானும் கண்களாலே பேசும்போது
 எனக்குள்ளே தோன்றும் மோகம் புதிதானது

பெண்: அச்சமா, நானமா, அன்பிலே கொல்வதா
 உன்னிடம் இழுத்தது எதுவோ தெரியலேயே

ஆண்: ஹேய்... எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
 எப்போது காதல் தாக்கும், தெரியாதது
 எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
 எப்போது காதல் தாக்கும், தெரியாதது

 (இசை...)

ஆண்: மழை வரும் நேரம் முன்பு, தரை வரும் காற்றைப் போல  மனம் எங்கும் வந்தாய் பெண்ணே, ஜில்லென்று நீ

பெண்: தூவும் மழை நின்ற பின்பு, தூரல் தரும் மரங்கள் போல
 நினைவுகள் தந்தே செல்வாய், என்றென்றும் நீ

ஆண்: ஓ... கண்களா, கன்னமா, பார்வையா, வார்த்தையா
 உன்னிடம் பிடித்தது எதுவோ, தெரியலேயே...

பெண்: எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
 எப்போது காதல் தாக்கும், தெரியாதது
 எப்போது பூக்கள் பூக்கும், புரியாதது
 எப்போது காதல் தாக்கும், தெரியாதது

ஆண்: ஒரு மாலை நேரம் வந்தது, வந்தது பூங்காற்று
 என் மனதின் ஓரம் சென்றது, சென்றது பூ போட்டு

Va Va Nilava pudichi - Naan Mahaan Alla Tamil Lyrics

Va Va Nilava pudichi - Naan Mahaan Alla Tamil Lyrics

ஆண்: வா வா நிலவை புடிச்சுத் தரவா
 வெள்ளி பொம்மையாக்கி தரவா
 ஓஹோ விடியும் போதுதான்
 மறைஞ்சு போகுமே
 கட்டிப்போடு மெதுவா
 வா வா நிலவை புடிச்சுத் தரவா
 வெள்ளி பொம்மையாக்கி தரவா
 ஓஹோ விடியும் போதுதான்
 மறைஞ்சு போகுமே
 கட்டிப்போடு மெதுவா
 வானத்தில் ஏறி ஏணி கட்டு
 மேகத்தை அள்ளி மாலை கட்டு
 வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
 வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...

 ஓ... ஓ....

 வா வா நிலவை புடிச்சுத் தரவா
 வெள்ளி பொம்மையாக்கி தரவா
 ஓஹோ விடியும் போதுதான்
 மறைஞ்சு போகுமே
 கட்டிப்போடு மெதுவா

(இசை...)

ஆண்: கவலை நம்மை சில நேரம்
 கூரு போட்டு துண்டாக்கும்
 தீயினை தீண்டி வாழும்போதே
 தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
 கடலை சேரும் நதி யாவும்
 தன்னை தொலைத்து உப்பாகும்
 ஆயினும் கூட மழையாய் மாறி
 மீண்டும் அதுவே முத்தாகும்
 ஒரு வட்டம்போலே வாழ்வாகும்
 வாசல்கள் இல்லா கனவாகும்
 அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
 புரிந்தால் துயரம் இல்லை
 வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
 வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...

 ஓ... ஓ...

 வா வா நிலவை புடிச்சுத் தரவா
 வெள்ளி பொம்மையாக்கி தரவா
 ஓஹோ விடியும் போதுதான்
 மறைஞ்சு போகுமே
 கட்டிப்போடு மெதுவா

 (இசை...)

ஆண்: ஆஹா...
 இரவை பார்த்து மிரளாதே
 இதயம் வேர்த்து துவளாதே
 இரவுகள் மட்டும் இல்லை என்றால்
 நிலவின் அழகு தெரியாதே
 கனவில் நீயும் வாழாதே
 கலையும் போது வருந்தாதே
 கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்
 கைகளில் பறித்திட முடியாதே
 அந்த வானம் போலே உறவாகும்
 மேகங்கள் தினமும் வரும் போகும்
 அட வந்தது போனால் மறுபடி ஒன்று
 புதிதாய் உருவாகும்...

குழு: வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
 வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...

 ஓ... ஓ...

Iragai Pole - Naan Mahaan Alla Tamil Lyrics

Iragai Pole - Naan Mahaan Alla Tamil Lyrics

ஆண்: இறகை போலே அலைகிறேனே
 உந்தன் பேச்சை கேட்கையிலே
 குழந்தை போலே தவக்கிறேனே
 உந்தன் பார்வை தீண்டையிலே
 தொலையாமல் தொலைந்தேனே
 உன் கைகள் என்னைத் தொட்டதும்
 கரையாமல் கரைந்தேனே
 உன் மூச்சுக் காற்று பட்டதும்
 அநியாய காதல் வந்ததே
 அடங்காத ஆசை தந்ததே
 எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே
 தொட்டு சென்றதே
 கண்ணோரம் காதல் வந்தால்
 கண்­ரும் தித்திப்பாகும்
 வேறொன்றும் தேவையில்லை
 நீ மட்டும் போதும் போதும்
 என்னோடு நீயும் வந்தால்
 எல்லாமே கையில் சேரும்
 வேறொன்றும் தேவையில்லை
 நீ மட்டும் போதும் போதும்

 (இசை...)

ஆண்: கூட வந்து நீ நிற்பதும்
 கூடு விட்டு நான் செல்வதும்
 தொடருதே தொடருதே நாடகம்...
 பாதி மட்டுமே சொல்வதும்
 மீதி நெஞ்சிலே என்பதும்
 புரியுதே புரியுதே காரணம்...
 நேரங்கள் தீருதே
 வேகங்கள் கூடுதே
 பூவே உன் கண்ணுக்குள்ளே
 பூமிப் பந்து சுத்துதே...
 கண்ணோரம் காதல் வந்தால்
 கண்­ரும் தித்திப்பாகும்
 வேறொன்றும் தேவையில்லை
 நீ மட்டும் போதும் போதும்
 என்னோடு நீயும் வந்தால்
 எல்லாமே கையில் சேரும்
 வேறொன்றும் தேவையில்லை
 நீ மட்டும் போதும் போதும்

 (இசை...)

ஆண்: ஹேய், என்னானதோ ஏதானதோ
 இல்லாமல் போச்சே தூக்கம்
 கண்ணே உனை காணாமல் நானில்லை...

 ஓ...
 என்மீதிலே உன் வாசனை
 எப்போதும் வீசப் பார்க்கிறேன்
 அன்பே உனை சேராமல் வாழ்வில்லை...

 ஓ...
 நீ என்னை காண்பதே வானவில் போன்றதே
 தூரத்தில் உன்னைக் கண்டால் தூரல்
 நெஞ்சில் சிந்துதே...


(இசை...)

ஆண்: கண்ணோரம் காதல் வந்தால்
 கண்­ரும் தித்திப்பாகும்
 வேறொன்றும் தேவையில்லை
 நீ மட்டும் போதும் போதும்
 என்னோடு நீயும் வந்தால்
 எல்லாமே கையில் சேரும்
 வேறொன்றும் தேவையில்லை
 நீ மட்டும் போதும் போதும்

Thursday, December 9, 2010

Mynaa Mynaa - Mynaa Tamil Lyrics

Mynaa Mynaa - Mynaa Tamil Lyrics

ஆண்: மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
 மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
 சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
 நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
 என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
 தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது முறையா முறையா
 எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா
 மைனா மைனா... ஏலே....
 ஏலே.... ஏலே.... ஏலே....

 (இசை...)

ஆண்: சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல
 சித்திரைக்கி உச்சி வெய்யில் போல
 நீயும் எனக்காக உயிர்
 வாழ்வேன் உனக்காக
 சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச
 கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
 அடியே.... நீ மணலத் திரிச்ச கயிறா
 கொடியே... நீ உசுர கடைஞ்ச தயிரா
 மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
 மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற

 (இசை...)

ஆண்: கட்டவண்டி செல்லும் வழி தேட
 உண்டிவில்லும் ஜல்லிக்கல்ல தேட
 நானும் உன்னத் தேடி
 அலைஞ்சேனே மனம் வாடி
 பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
 பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
 தொணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
 கனவா... நீ கலைஞ்சா நெனைப்பேன் தீர

ஆண்: மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
 மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
 சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
 நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
 என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
 தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சதேன் முறையா முறையா
 அடையாளம் தெரியவே இல்ல
 புதுசா நீ பொறந்தியா
 மைனா... மைனா...

Kaiya Pudi - Mynaa Tamil Lyrics

Kaiya Pudi - Mynaa Tamil Lyrics

ஆண்: கையப்புடி கண்ணப்பாரு
 உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ!
 கொஞ்சம் சிரி எட்டு வைய்யி
 தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ!
 மெதுவா பாடு எதையாவது
 பனிப்போல் நீங்கும் சுமையானது
 இனிமேலே....
 மனசோடு உள்ளதப் பேசு என்னிடம் தீரும் பாரம்
 விலகாத அன்புடன் சேர்ந்திருக்கணும் நீயும் நானும்

பெண்: கையப்புடி கண்ணப்பாரு
 உள் மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ!
 கொஞ்சம் சிரி எட்டு வைய்யி
 தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ!
 மெதுவா பாடு எதையாவது
 பனிப்போல் நீங்கும் சுமையானது
 இனிமேலே....

ஆண்: ஓ... உன்னையன்றி வேறு சுகம் எனக்கில்லையே
 உள்ளமெங்கும் நீயே வழித்துணை நன்மையே

பெண்: உன்ன நெனைக்கையில் பசி எடுக்கல
 நடு நிசியில விழி உறங்கல

ஆண்: விடியற வரை ஏதும் புடிக்கல
 விடுகதை இது விடை கிடைக்கல ஏனோ...

பெண்: அடை மழையிலும் குளிரெடுக்கல
 சுடும் வெயிலிலும் அனல் கொதிக்கல

ஆண்: மனம் மறந்திடும் வழித் தெரியல
 எதுவரை இது வரும் புரியல ஏனோ...

ஆண்: கடல சேரும் நதியானது
 உறவ சேரும் உயிரானது

பெண்: புவி மேலே.......

 (இசை...)

இருவர்: சுற்றும் உலகினில் என்ன அதிசயம்
 உன்னைவிட ஏதும் இல்ல ரகசியம்
 தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்
 வண்ண நினைவுகள் வந்து உரசுது ஏனோ...

பெண்: எதுக்காக இப்படி கூறுகெட்டது மனசு மனசு

ஆண்: அநியாயம் பண்ணிட ஆசப்பட்டது வயசு வயசு

ஆண்: கையப்புடி...

பெண்: கையப்புடி...

Jingu Chikka - Mynaa Tamil Lyrics

Jingu Chikka - Mynaa Tamil Lyrics

ஆண்: ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு
 ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
 எங்கே நீயும் கௌம்பிப்போற சொல்லு வேகமா
 நானும் தொணைக்கி வர்றேன் பேசிக்கிட்டே கண்ணே போவோமா
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

பெண்: ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு
 ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
 எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க
 நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம்
 எட்டி நகருங்க

ஆண்: ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஆண்: நாடு ரொம்ப கெட்டுப்போச்சி
 நல்லதெல்லாம் செத்துப்போச்சி
 கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா
 நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி குட்டி கோகிலா ஹேய்
 (இசை...)

ஆண்: ராயங்கூரு மூனு மயிலு
 நாங்குனேரி நூறு மயிலு
 சாயங்கால வேளையில சேலை எதுக்கடி
 சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் வெலக்கடி
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

பெண்: சீராலூரு அஞ்சு மயிலு
 சிதம்பரமோ அம்பது மயிலு
 வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன
 அந்த வெட்கக்கேட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற

ஆண்: ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்

ஆண்: சிங்கிப்பட்டி ஒன்பது மயிலு
 சிங்கப்பூரு எத்தன மயிலு
 அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி
 உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி
 ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..

 (இசை...)

ஆண்: பூதலூரு ஏழு மயிலு
 பூண்டிக்கோயிலு நாலு மயிலு
 காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
 இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா

பெண்: கும்பகோணம் ஆறு மயிலு
 குளித்தலையோ நாலு மயிலு
 ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல
 உங்க அப்பன் அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல

ஆண்: ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
ஆண்: மாயவரம் எட்டு மயிலு
 மன்னார்குடி பத்து மயிலு
 எறைக்காத கேணியில நீரு ஏதடி
 என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி
 அடியே........

ஆண்: ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
 ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்